மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்றால் சொந்த வாழ்க்கை யிலும் தனிநபர் ஒழுக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கான உண்மையான விசுவாசி களாக, சேவகர்களாக இருப்பதற்குத் தயாரான வர்கள். இந்த நெறிமுறைகள் வேறு எந்தக் கட்சியிலாவது இருக்கிறதா என்கிற கேள்வியை இந்த மேடையில் இருந்து நான் சவாலாக முன்வைக்க விரும்புகிறேன்.
மாற்றங்கள் வேண்டும் என்பதில் தவ றில்லை. மாற்ற வேண்டும் என்று நினைப்பதி லும் தவறில்லை. ஆனால் வெறும் கட்சி மாற்றமோ, தலைவர் மாற்றமோ அல்ல, கொள்கை மாற்றமே உண்மையான மாற்றாக இருக்க முடியும். வசதி படைத்தவர்களுக்கு ஆதரவான கொள்கைகளுக்கு மாறாக, உழைப்பாளி மக்களுக்கான கொள்கைகளை உண்மையான மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே முன்வைக்கிறது.
கம்யூனிஸ்டுகள் ஒரு தனியான வார்ப்பு என்று சொல்வார்கள். இந்தக் கட்சியில் தவறுகள் நடந்தால் அதற்கு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்சியின் அமைப்பு விதிகளில் உள்ளது. குடும்ப வன்முறை கூடாது, பாலியல் துன்புறுத்தல் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதெல்லாம் கட்சியின் அமைப்பு விதிகளில் எழுதப்பட்டுள்ளது.
போராடும் தொழிலாளர்களுக்கு, போராடும் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் எந்த வேலையையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் மக்களுக்கான உண்மையான விசுவாசியாக, சேவகனாக இருக்கும். இதுவே எங்கள் உறுதிமொழி.
\ கும்பகோணத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரைகளில் இருந்து